Sunday, July 17, 2011

ரஜினியின் நாயகியாக ராணாவில் ஒப்பந்தமான பிறகு தீபிகா


ரஜினியின் நாயகியாக ராணாவில் ஒப்பந்தமான பிறகு தீபிகா வேறு எந்தப் படத்திலும் கவனம் செலுத்துவதை நிறுத்திக் கொண்டார்.

ரஜினியின் கனவுப் படமான இது, இந்தியா முழுக்க தனது கவுரவத்தை பெரிய அளவு உயர்த்தும் என்பதே அதற்குக் காரணம். ஆனால் எதிர்பாராத விதமாக ரஜினிக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதால் படப்பிடிப்பு இரண்டு மாதங்கள் தாமதமாகிவிட்டது.

ஒரு நடிகையாக இது அவருக்கு மிகப் பெரிய இழப்பு. ஆனால் இதை அவர் வெளியில் காட்டிக் கொள்ளவில்லை.

இந்த நேரம் பார்த்து அவருக்கு ரஜினியிடமிருந்து தொலைபேசி அழைப்பு வர, இருந்த கொஞ்ச நஞ்ச வருத்தமும் பறந்துவிட்டது தீபிகாவுக்கு.

அவர் கூறுகையில், "ரஜினி சார் குரலை தொலைபேசியில் கேட்டேன். படப்பிடிப்புக்கு முன்பு என்னிடம் போனில் அவர் பேசியபோது கேட்ட அதே உற்சாகக் குரல். உண்மையிலேயே அன்று அதைவிட சந்தோஷமான விஷயமே இல்லை என்று தோன்றியது.

இது எந்தப் படத்தில் நடிக்கும் முன்பும் இல்லாத ஒரு எதிர்ப்பார்ப்பும், பரபரப்பும் எனக்கு உள்ளது. இந்தப் படத்தின் நாயகி வாய்ப்பை எனக்குத் தந்த சூப்பர் ஸ்டார் ரஜினி சாருக்கு நன்றி. அவருடன் சேர்ந்து நடிக்கும் நாளுக்காக காத்திருக்கிறேன்," என்றார்.

Rajini Rana Movie Shooting

No comments:

Post a Comment